Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத்தின் கீழ் மேலும் 175 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத்தின் கீழ் மேலும் 175 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சுவாராம் அமைப்பு, தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த கொடுங்கோல் சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 66 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் 175 பேர் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவாராம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெர்னல் தான் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய இந்த சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் சுவாராம் உறுதியாக இருந்து வருவதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்யாமலேயே குறிப்பிட்ட காலம் வரையில் தடுப்புக் காவலில் வைப்பதற்கு சொஸ்மா வகை செய்கிறது. இது உண்மையிலேயே மனித உரிமை மீறலாகும் என்று ஜெர்னல் தான் தெரிவித்தார்.

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று கூறி, 2023 ஆம் ஆண்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு , அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர் - சிலாங்கூர் சைனிஸ் அஸ்சம்ளி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜெர்னல் தான் இவ்வாறு தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி