Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத்தின் கீழ் மேலும் 175 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத்தின் கீழ் மேலும் 175 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சுவாராம் அமைப்பு, தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த கொடுங்கோல் சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 66 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் 175 பேர் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவாராம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெர்னல் தான் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய இந்த சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் சுவாராம் உறுதியாக இருந்து வருவதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்யாமலேயே குறிப்பிட்ட காலம் வரையில் தடுப்புக் காவலில் வைப்பதற்கு சொஸ்மா வகை செய்கிறது. இது உண்மையிலேயே மனித உரிமை மீறலாகும் என்று ஜெர்னல் தான் தெரிவித்தார்.

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று கூறி, 2023 ஆம் ஆண்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு , அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர் - சிலாங்கூர் சைனிஸ் அஸ்சம்ளி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜெர்னல் தான் இவ்வாறு தெரிவித்தார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்