கோலாலம்பூர், ஜன - 8
2023 ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான மலாய்மொழி பேசும் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.
நாட்டில் 395,870 எஸ்.பி.எம் மாணவர்களை உள்ளடக்கிய இத்தேர்வு வரும் வியாழக்கிழமை, ஜனவரி 11 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
ஆங்கிலம் பேசும் தேர்வு ஜனவரி 17 முதல் 23 ஆம் தேதி வரையிலும், மலாய் மற்றும் ஆங்கிலம் கேற்கும் தேர்வு ஜனவரி 29 ஆம் தேதியிலும், எஸ்.பி. எம் எழுதும் தேர்வு ஜனவரி 30 தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கின்றன.
ஜொகூர் மாநில அரசாங்கம், மாநில கல்வித்துறையுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒபி பாயுங் செயல்படுத்தவுள்ளது.








