கோலாலம்பூர், ஜூன்.19-
தற்போது இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த நெருக்கடி காரணமாக மலேசியாவில் பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்படக்கூடும். இருப்பினும் மலேசியாவில் ரோன் 95 விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.
விலை உயர்வானது, தேசிய பெட்ரோலிய நிறுவனத்திற்குப் பலன் அளிக்கும் என்றாலும் அதிக எரிபொருள் செலவுகளால் அதன் சுமை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் விளக்கினார்.








