Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பூசாரி தப்பி விடாமல் இருப்பதற்கு விழிப்பு நிலையில் நாட்டின் பிரதான நுழைவாயில்கள்
தற்போதைய செய்திகள்

பூசாரி தப்பி விடாமல் இருப்பதற்கு விழிப்பு நிலையில் நாட்டின் பிரதான நுழைவாயில்கள்

Share:

சிப்பாங், ஜூலை.12-

சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள கோவில் ஒன்றில், முன்னாள் அழகு ராணிப் போட்டி வெற்றியாளரான பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வரும் பூசாரி ஒருவர், நாட்டை விட்டு தப்பி விடாமல் இருப்பதற்கு நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் பகுதிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்து வெளியேறும் வழிகளையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த சந்தேக நபர் இன்னமும் நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று சிப்பாங் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பூஜை என்ற பெயரில் கடந்த ஜுலை 4 ஆம் தேதி நிகழ்ந்த இந்த மானபங்கம் சம்பவம் தொடர்பில் 27 வயது அந்தப் பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஓர் இந்தியப் பிரஜையான 36 வயது பூசாரி தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.

சம்பவம் நிகழ்ந்த அன்றே அந்த பூசாரி, கோவிலிருந்து தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் தொடர்பில் கோயில் நிர்வாகத்திடம் இருந்து வாக்குமூலங்கள் பெற மொத்தம் ஒன்பது பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிப்பாங் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண், சிப்பாங்கில் உள்ள கோவிலில் பூசாரி ஒருவரினால் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து சமூக ஊடகப் பதிவில் பேசி, வெளியிட்ட காணொளி வைரலானது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது