May 4, 2026
Thisaigal NewsYouTube
பெண் கொலை: உடல் பாகங்கள் வீசப்பட்ட வழக்கு- சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்
தற்போதைய செய்திகள்

பெண் கொலை: உடல் பாகங்கள் வீசப்பட்ட வழக்கு- சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.26-

சபாவில் தாமான் இண்டா பெர்மாய் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சந்தேக நபரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளதாக சபா போலீஸ் கமிஷனர் டத்தோ ஜவுதே டிகுன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "விசாரணைக்கான கால அவகாசம் முடிந்து விட்டது. இந்த வாரத்தில், அதாவது நாளை அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்," என்று ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி காலை 7 மணியளவில், குப்பை லாரி ஊழியர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் 44 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Related News