மக்களின் நலனுக்காக, ஒற்றுமை அரசாங்கத்தில் பாஸ் கட்சியை ஏற்க அமானா தயாராக இருக்கிறது என அக்கட்சியின் துணைத் தலைவர் அட்லி சஹாரி தெரிவித்தார்.
பாஸ் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அதனை அமானா விரோதியாகப் பார்க்கவில்லை. அரசியல் கொள்கைகள் வேறுபாடாக இருந்தாலும், அவற்றுக்கு மேலாக மக்களின் நலனை முன்னிறுத்தி ஒத்துழைக்க வித்திடுகிறது என்றார் அவர்.
ஆகவே, தொடக்கத்தில் இருந்தே, ஒற்றுஐ அரசாக்கத்தில் இடம்பெறும் எந்தக் கட்சியுடனும் அமானா ஒத்துழைத்து ஒன்றாய் இயங்கத் தயாராக இருக்கிறது என்றார் அவர்.
நிலையான அரசியலை நிலைநாட்ட, ஒற்றுமை அரசாங்கத்துடன் பாஸ் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கும் அமானா கட்சி வரவேற்கிறது.
ஒற்றுமையை நிலை நாட்டுவதே முதன்மை நோக்கமாக இருக்கின்ற நிலையில், இனம் , மதம், ஆட்சியாளர் ஆகியவற்றை உட்படுத்திய 3ஆர் விவகாரங்களை அரசியல் லாபத்திற்காகத் தவறாகப் பயன்[அடுத்த வேண்டாம் எனவும் அட்லி சுட்டிக் காட்டினார்.








