Aug 10, 2026
Thisaigal NewsYouTube
விமான இயந்திரத்தில் தீப் பிடித்ததா? ஏர் ஆசியா மறுப்பு
தற்போதைய செய்திகள்

விமான இயந்திரத்தில் தீப் பிடித்ததா? ஏர் ஆசியா மறுப்பு

Share:

சிப்பாங், மார்ச்.27-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சீனா, Shenzhen- க்கு புறப்பட்ட தனது விமானத்தின் இயந்திரத்தில் தீப் பிடித்துக் கொண்டதன் காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதாகக் கூறப்படுவதை ஏர் ஆசியா விமான நிறுவனம் இன்று மறுத்துள்ளது.

விமானம், நேற்றிரவு 171 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் மீண்டும் கேஎல்ஐஏ-2 க்கு திரும்பியதற்கு முக்கியக் காரணம், விமான இயந்திரத்தில் தீப் பிடிக்கவில்லை. மாறாக, விமான இயந்திரத்திற்கும், கேபினுக்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ள காற்றை உள்வாங்கிக் கொடுக்கும் குழாயில் வெப்ப காற்று வெளியேறத் தொடங்கியது.

இதனால், சீனாவிற்கான தனது பயணத்தைத் தொடர முடியாமல் விமானத்தை கேஎல்ஐஏவிற்கே திருப்புவதென விமானி எடுத்த எடுத்தார். இதன் காரணமாகவே விமானம் கோலாலம்பூருக்கே திரும்பி அவசரமாகத் தரையிறங்கியதாக ஏர் ஆசியா விமான நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானத்தின் இயந்திரத்தில் தீப் பிடிக்கவில்லை என்று உறுதிப்படுத்திய ஏர் ஆசியா, அந்த ஏர்பஸ் A320 ரக விமானம் மீண்டும் வரும் திங்கட்கிழமை செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்