பிரதமர் Datuk Seri Anwar Ibrahim-ன் 79ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நாட்டை வழிநடத்தும் ஞானம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என அவர் தமது பிரார்த்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளையில், நாட்டிற்க்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டங்களுக்கு சிவில் சேவை தொடர்ந்து உறுதியான ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமர் அலுவலகமும் காணொளி ஒன்றின் மூலம் அன்வாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
“முயற்சிகள் தொடர்கின்றன, நம்பிக்கை நிறைவேற்றப்படுகிறது, இறைவனின் மீது நம்பிக்கை வைக்கிறோம்” என்ற செய்தியும் அதில் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, மலேசியா மடானி முகநூல் பக்கமும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இறைவனின் பாதுகாப்பும் அருளும் எப்போதும் அவருக்கு கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்துள்ளது.
நாட்டுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உழைக்க தேவையான வலிமை பிரதமருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளது








