Jan 20, 2026
Thisaigal NewsYouTube
எதிர்வாதம் புரிய இந்திய ஆடவருக்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

எதிர்வாதம் புரிய இந்திய ஆடவருக்கு உத்தரவு

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தியதாக இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் ஓர் இந்திய ஆடவர், எதிர்வாதம் புரியும்படி சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

26 வயது எஸ். சிவசங்கரன் என்ற அந்த ஆடவர், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி ரந்தாவ், தாமான் ஸ்ரீ ரம்பாயில் 413.3 கிராம் கனபீஸ் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

அபாயகர போதைப்பொருள் சட்டம் 39 B பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட சிவசங்கரனுக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளதாக நீதிபதி டத்தின் ரொஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் சிவசங்கரன் சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் கீழ் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிபதி ரொஹானி இஸ்மாயில் உத்தரவிட்டுள்ளார்.

Related News

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

30,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகம்: போலீஸ்  அதிகாரி மற்றும் அவரது தம்பி 5 நாட்கள் தடுப்புக் காவல்

30,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகம்: போலீஸ் அதிகாரி மற்றும் அவரது தம்பி 5 நாட்கள் தடுப்புக் காவல்