கோல லங்காட், டெலுக் பங்லீமா காராங்கில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில், கட்டாயத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த 5 சிறார்கள், புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தால் மீட்கப்பட்டனர்.
நேற்று மாலை 5.45 மணியளவில் புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தின், மனித கடத்தல் வர்த்தக துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், குத்தகைத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்ட அந்த 5 சிறார்கள் காப்பாற்றப்பட்டதாக போலீஸ் தகவல் கூறுகிறது.
தவிர, பல்வேறு குற்றங்களுக்காக அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 80 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


