தைப்பிங், டிச. 27-
மாதாந்திர தவணைப்பணம் செலுத்த தவறியதற்காக இழுக்க வந்த தனது மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டு, நாசவேலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மோட்டார் சைக்கிளை இழுக்க வந்த நபர், செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து பேரா, தைப்பிங்கைச் சேர்ந்த அந்த மாது கைது செய்யப்பட்டார்.
தனது மோட்டார் சைக்கிளை இழுத்து செல்வதிலிருந்து தடுப்பதற்கு மோட்டார் சைக்கிளுக்கு அந்த மாது தீயிடும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த மாது தற்போது, குற்றவியல் சட்டம் 345 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நாஸிர் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதிருப்தியின் காரணமாக அந்த மாது இந்த நாசவேலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் நாஸிர் மேலும் கூறினார்.
இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சூப்ரிண்ட். ஹாஜி சுல்கிப்லி குறிப்பிட்டார்.








