Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

போலீசாரால் தேடப்பட்டு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.08-

போதைப் பொருள் கடத்தல் மற்றும் இதர குற்றச்செயல்கள் தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர், இன்று அதிகாலையில் போலீசார் நடத்திய அதிரடித் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜோகூர்பாரு, தாமான் மோலேக்கில் அதிகாலை 3.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 63 வயதுடைய நபரை, சோதனைக்காகத் தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்டனர். எனினும் அந்த நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முற்பட்ட போது, போலீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

முன்னதாக, ஜாலான் பெர்சியாரான் பூமி ஹீஜாவிலிருந்து தாமான் மோலேக்கை நோக்கி சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த ஹோண்டா Vario மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை , ஜோகூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த D9 கடுங்குற்றத் தடுப்பு போலீசார் அடையாளம் கண்டனர்.

அந்த மோட்டார் சைக்கிளைப் பின் தொடர்ந்து சென்ற போலீசார், அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும் அந்த மோட்டார் சைக்கிளோட்டி, போலீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபருக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 14 குற்றப்பதிவுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து