ஆசிரியர் சேவைத் துறையில் உள்ளவர்கள், சட்ட அம்சங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் கொண்டிருக்குமாறு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்.யூ.தி.பி. கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்கள் இத்தகைய விழிப்புணர்வைக் கொண்டிருப்பது அவசியமாகும் என்று என்.யூ.தி.பி. யின் தலைவர் அமிருடின் ஆவாங் குறிப்பிட்டார்.
ஆசிரியர் சேவை, கற்பித்தல் தொடர்பான விவகாரங்கள், புறப்பாட நடவடிக்கைகள், பள்ளி நிர்வகிப்பு முறை தொடர்பில், ஆசிரியர்களுக்கு எதிராக இந்த மே மாதம் வரை 8 புகார்களை என்.யூ.தி.பி. பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டங்கள் தொடர்பான தெளிவை பெறுவது மூலம், தங்கள் பணி காலத்தில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று அவர்களால் பகுத்தறிய முடியும் என்று அமிருடின் ஆவாங்குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


