Aug 19, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ-வில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது - மனநலப் பிரச்சினைக்கான மருந்தை உட்கொள்ள மறந்ததால் விபரீதம்
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ-வில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது - மனநலப் பிரச்சினைக்கான மருந்தை உட்கொள்ள மறந்ததால் விபரீதம்

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டவரான அவர், நேற்று பிற்பகல் 1.19 மணியளவில் புறப்பாட்டு மண்டபத்தில் ஓடியும், பாடியும், நடனமாடியும் பயணிகளைத் தொந்தரவு செய்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்தினர்.

அப்பெண் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்ள மறந்துவிட்டதாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சம்பவம் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கேஎல்ஐஏ போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

மலேசியர்கள் உட்பட பாகிஸ்தானில் சிக்கிய மாபெரும் இணைய மோசடிக் கும்பல் / விசாரணைக்காக இஸ்லாமாபாத் விரைந்தது சிறப்புப் படை

மலேசியர்கள் உட்பட பாகிஸ்தானில் சிக்கிய மாபெரும் இணைய மோசடிக் கும்பல் / விசாரணைக்காக இஸ்லாமாபாத் விரைந்தது சிறப்புப் படை

2027-இல் அதிகரிக்கும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை – நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள்

2027-இல் அதிகரிக்கும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை – நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள்

அக்டோபர் 10-ஆம் தேதி தனது கனவுக் காதலி பெல்லாவை கரம் பிடிக்கிறார் சயிட் சாடிக்

அக்டோபர் 10-ஆம் தேதி தனது கனவுக் காதலி பெல்லாவை கரம் பிடிக்கிறார் சயிட் சாடிக்

பந்திங் உணவகத்தில் அரிய வன விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் – உரிமையாளர் கைது

பந்திங் உணவகத்தில் அரிய வன விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் – உரிமையாளர் கைது

வெளிநாட்டவர்களுக்கு பெருமளவில் குடியுரிமையா? – உள்துறை அமைச்சர் மறுப்பு

வெளிநாட்டவர்களுக்கு பெருமளவில் குடியுரிமையா? – உள்துறை அமைச்சர் மறுப்பு

குடிநுழைவுத் துறை லோரி மோதிய விபத்தில் 3 பேர் பலி – தீவிர விசாரணை நடத்த அன்வார் உத்தரவு

குடிநுழைவுத் துறை லோரி மோதிய விபத்தில் 3 பேர் பலி – தீவிர விசாரணை நடத்த அன்வார் உத்தரவு