Aug 19, 2026
Thisaigal NewsYouTube
பந்திங் உணவகத்தில் அரிய வன விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் – உரிமையாளர் கைது
தற்போதைய செய்திகள்

பந்திங் உணவகத்தில் அரிய வன விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் – உரிமையாளர் கைது

Share:

சிலாங்கூர் மாநிலம் பந்திங்கில் 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான எறும்புத்தின்னி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பெண் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தென்மண்டல ஒருங்கிணைந்த வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், தேசிய வன விலங்குகள் மற்றும் பூங்காக்கள் துறையான பெர்ஹிலித்தான் அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனையை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் எறும்புத்தின்னி, மான், தவளை, புனுகுப்பூனை மற்றும் மென்மையான ஓடு கொண்ட ஆமைகளின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொட்டலங்களுடன், உறைவிப்பான் மற்றும் கைப்பேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விசாரணைக்காக மாவட்ட பெர்ஹிலித்தான் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வனவிலங்கு குற்றங்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என பெர்ஹிலித்தான் தெரிவித்துள்ளது.

Related News

மலேசியர்கள் உட்பட பாகிஸ்தானில் சிக்கிய மாபெரும் இணைய மோசடிக் கும்பல் / விசாரணைக்காக இஸ்லாமாபாத் விரைந்தது சிறப்புப் படை

மலேசியர்கள் உட்பட பாகிஸ்தானில் சிக்கிய மாபெரும் இணைய மோசடிக் கும்பல் / விசாரணைக்காக இஸ்லாமாபாத் விரைந்தது சிறப்புப் படை

2027-இல் அதிகரிக்கும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை – நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள்

2027-இல் அதிகரிக்கும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை – நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள்

கேஎல்ஐஏ-வில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது - மனநலப் பிரச்சினைக்கான மருந்தை உட்கொள்ள மறந்ததால் விபரீதம்

கேஎல்ஐஏ-வில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது - மனநலப் பிரச்சினைக்கான மருந்தை உட்கொள்ள மறந்ததால் விபரீதம்

அக்டோபர் 10-ஆம் தேதி தனது கனவுக் காதலி பெல்லாவை கரம் பிடிக்கிறார் சயிட் சாடிக்

அக்டோபர் 10-ஆம் தேதி தனது கனவுக் காதலி பெல்லாவை கரம் பிடிக்கிறார் சயிட் சாடிக்

வெளிநாட்டவர்களுக்கு பெருமளவில் குடியுரிமையா? – உள்துறை அமைச்சர் மறுப்பு

வெளிநாட்டவர்களுக்கு பெருமளவில் குடியுரிமையா? – உள்துறை அமைச்சர் மறுப்பு

குடிநுழைவுத் துறை லோரி மோதிய விபத்தில் 3 பேர் பலி – தீவிர விசாரணை நடத்த அன்வார் உத்தரவு

குடிநுழைவுத் துறை லோரி மோதிய விபத்தில் 3 பேர் பலி – தீவிர விசாரணை நடத்த அன்வார் உத்தரவு