2027-ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் 1,780 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தீபகற்ப மலேசியா மற்றும் லபுவான்-ல் 668 மில்லியன் ரிங்கிட் செலவில் 524 திட்டங்களின் கீழ் 1,255 சாதாரண வகுப்பறைகளும், ஒருங்கிணைந்த சிறப்புக்கல்வித் திட்ட மாணவர்களுக்காக 525 பி.பி.கே.ஐ வகுப்பறைகளும் அமைக்கப்பட உள்ளன.
அதேவேளையில், சரவாக்கில் 81.5 மில்லியன் ரிங்கிட் செலவில் 210 வகுப்பறைகளும், சபாவில் 58 மில்லியன் ரிங்கிட் செலவில் 112 வகுப்பறைகளும் கட்டப்பட உள்ளன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர்களுக்கு இடவசதி கிடைக்கும் என கல்வியமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஏற்கெனவே திட்டமிட்ட காலத்துக்கு முன்பே சில திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் 2026 டிசம்பர் மாதத்திற்குள் கட்டம் கட்டமாக நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027-ஆம் ஆண்டு முதல் ஆறு வயது குழந்தைகள் முதலாம் ஆண்டில் சுமூகமாக சேர்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.








