Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரியிடம் 20 மணி நேரத்திற்கு மேல் விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரியிடம் 20 மணி நேரத்திற்கு மேல் விசாரணை

Share:

புத்ராஜெயா, மார்ச்.19-

லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இதுவரையில் 20 மணி நேரத்திற்கு அதிகமாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் சப்ரியிடம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விசாரணை இன்று நான்காவது நாளை எட்டியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் முறையாக எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் காணப்பட்ட இஸ்மாயில் சப்ரியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மறுநாள் மார்ச் 14 ஆம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மார்ச் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்பிஆர்எம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவருக்கு எதிரான விசாணை நாளை மார்ச் 20 ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் தொடரும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து