கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர், நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் மறுத்துள்ளார். சனூசி கைது செய்யப்பட்டதற்கான எந்தவொரு தகவலையும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகமும், கெடா போலீஸ் தலைமையகமும் கொண்டிருக்கவில்லை என்று சைபுடின் விளக்கினார். சனூசி கைது செய்யப்பட்டதை மறுத்து இருக்கும் போலீசாரின் அறிக்கைக்கு பின்னரே இது குறித்து தமக்கு தெரியவந்ததாகவும், தவறான செய்தியை வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட அகப்பக்க செய்தித் தளம், அந்த செய்தியை மீட்டுக்கொள்வதுடன், தவறான செய்தியை வெளியிட்டதற்காக மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் பொதுச்செயலாளருமான சைபுடின் கேட்டுக்கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


