ராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதாவர்கள் அதிகளவில் சேர்க்கப்படுவர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் சேர்வதற்கு பூமிபுத்ரா அல்லாதாவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதற்குப் பலதரப்பட்ட நடவடிக்கைகளை ராணுவப் படை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தில், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பூர்வ குடியினர் மிகக் குறைவாக இருப்பது, அவர்களிடம் நாட்டுப் பற்று இல்லை என்று பொருள்படாது. மாறாக, பொருளாதார மற்றும் வர்த்தகம் நலன் சார்ந்த தொழில்துறைகளில் அதிகளவில் பொருள் ஈட்ட முடியும் என்று உறுதியளிக்கப்படுவதால் அவர்கள் அத்துறைகளை நாடிச் செல்வதாக இன்று, மேலவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் முகமட் ஹசான் இதனை தெரிவித்தார்.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ராணுவத்தில் மலாய்காரர்களின் எண்ணிக்கை 85.8 விழுக்காடாகும். அதைத் தொடர்ந்து, சபா சரவாக் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 7.6 விழுக்காடாகும்.
தவிர, இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாக இருக்கும் அதே வேளையில், சீனர்களின் எண்ணிக்கை 0.5 விழுக்காடு என்றும் பூர்வ குடி மக்களின் எண்ணிக்கை 0.4 விழுக்காடு என்றும் அமைச்சர் முகமட் ஹசான் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


