Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாகும்
தற்போதைய செய்திகள்

ராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாகும்

Share:

ராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதாவர்கள் அதிகளவில் சேர்க்கப்படுவர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் சேர்வதற்கு பூமிபுத்ரா அல்லாதாவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதற்குப் பலதரப்பட்ட நடவடிக்கைகளை ராணுவப் படை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தில், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பூர்வ குடியினர் மிகக் குறைவாக இருப்பது, அவர்களிடம் நாட்டுப் பற்று இல்லை என்று பொருள்படாது. மாறாக, பொருளாதார மற்றும் வர்த்தகம் நலன் சார்ந்த தொழில்துறைகளில் அதிகளவில் பொருள் ஈட்ட முடியும் என்று உறுதியளிக்கப்படுவதால் அவர்கள் அத்துறைகளை நாடிச் செல்வதாக இன்று, மேலவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் முகமட் ஹசான் இதனை தெரிவித்தார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ராணுவத்தில் மலாய்காரர்களின் எண்ணிக்கை 85.8 விழுக்காடாகும். அதைத் தொடர்ந்து, சபா சரவாக் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 7.6 விழுக்காடாகும்.

தவிர, இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாக இருக்கும் அதே வேளையில், சீனர்களின் எண்ணிக்கை 0.5 விழுக்காடு என்றும் பூர்வ குடி மக்களின் எண்ணிக்கை 0.4 விழுக்காடு என்றும் அமைச்சர் முகமட் ஹசான் விளக்கினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!