May 1, 2026
Thisaigal NewsYouTube
ராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாகும்
தற்போதைய செய்திகள்

ராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாகும்

Share:

ராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதாவர்கள் அதிகளவில் சேர்க்கப்படுவர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் சேர்வதற்கு பூமிபுத்ரா அல்லாதாவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதற்குப் பலதரப்பட்ட நடவடிக்கைகளை ராணுவப் படை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தில், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பூர்வ குடியினர் மிகக் குறைவாக இருப்பது, அவர்களிடம் நாட்டுப் பற்று இல்லை என்று பொருள்படாது. மாறாக, பொருளாதார மற்றும் வர்த்தகம் நலன் சார்ந்த தொழில்துறைகளில் அதிகளவில் பொருள் ஈட்ட முடியும் என்று உறுதியளிக்கப்படுவதால் அவர்கள் அத்துறைகளை நாடிச் செல்வதாக இன்று, மேலவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் முகமட் ஹசான் இதனை தெரிவித்தார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ராணுவத்தில் மலாய்காரர்களின் எண்ணிக்கை 85.8 விழுக்காடாகும். அதைத் தொடர்ந்து, சபா சரவாக் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 7.6 விழுக்காடாகும்.

தவிர, இந்தியர்களின் எண்ணிக்கை 1.4 விழுக்காடாக இருக்கும் அதே வேளையில், சீனர்களின் எண்ணிக்கை 0.5 விழுக்காடு என்றும் பூர்வ குடி மக்களின் எண்ணிக்கை 0.4 விழுக்காடு என்றும் அமைச்சர் முகமட் ஹசான் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி