Mar 17, 2026
Thisaigal NewsYouTube
இணைய ஆபத்துகள்: AI காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம்! - பிரதமர் மனைவி டாக்டர் அஸிஸா எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

இணைய ஆபத்துகள்: AI காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம்! - பிரதமர் மனைவி டாக்டர் அஸிஸா எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.16-

இணைய மோசடிகள், போலியான செய்திகள், இணைய மிரட்டல்கள் ஆகியவற்றிலிருந்து இளம் பெண்களைப் பாதுகாக்க, டிஜிட்டல் கல்வியறிவுக்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதியாக வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மூலம் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது இன்று மிகப் பெரியச் சவாலாக மாறியுள்ளதாகவும், இஃது இளம் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.

இன்று நடந்த தேசிய பெண்கள் சாரணியர் சீருடை இயக்கத்தின் 109 வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய வான் அஸிஸா, இவ்வாறு குறிப்பிட்டார்.

இணைய மோசடி, இணைய மிரட்டல் போன்ற அபாயங்களில் சிக்காமல் இருக்க, மாணவிகள், சீருடை சங்கத்தினர் ஆகியோரின் மத்தியில் விழிப்புணர்வும் பாதுகாப்பும் உடனடியாக உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று அவர் அவசர அழைப்பு விடுத்தார். இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, தொழில்நுட்ப அறிவும் நெறிமுறையும் கொண்ட தலைமுறையை உருவாக்க, அவர் இளம் பெண்கள் ஆதரவுக் குழுவையும் அதே விழாவில் தொடங்கி வைத்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு