Nov 16, 2025
Thisaigal NewsYouTube
இணைய ஆபத்துகள்: AI காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம்! - பிரதமர் மனைவி டாக்டர் அஸிஸா எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

இணைய ஆபத்துகள்: AI காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம்! - பிரதமர் மனைவி டாக்டர் அஸிஸா எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.16-

இணைய மோசடிகள், போலியான செய்திகள், இணைய மிரட்டல்கள் ஆகியவற்றிலிருந்து இளம் பெண்களைப் பாதுகாக்க, டிஜிட்டல் கல்வியறிவுக்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதியாக வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மூலம் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது இன்று மிகப் பெரியச் சவாலாக மாறியுள்ளதாகவும், இஃது இளம் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.

இன்று நடந்த தேசிய பெண்கள் சாரணியர் சீருடை இயக்கத்தின் 109 வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய வான் அஸிஸா, இவ்வாறு குறிப்பிட்டார்.

இணைய மோசடி, இணைய மிரட்டல் போன்ற அபாயங்களில் சிக்காமல் இருக்க, மாணவிகள், சீருடை சங்கத்தினர் ஆகியோரின் மத்தியில் விழிப்புணர்வும் பாதுகாப்பும் உடனடியாக உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று அவர் அவசர அழைப்பு விடுத்தார். இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, தொழில்நுட்ப அறிவும் நெறிமுறையும் கொண்ட தலைமுறையை உருவாக்க, அவர் இளம் பெண்கள் ஆதரவுக் குழுவையும் அதே விழாவில் தொடங்கி வைத்துள்ளார்.

Related News

ஒரு மணி நேரச் துரத்தல்! மின்கம்பி திருட்டுக் கும்பல் முறியடிப்பு! 60 குற்றப் பின்னணி கொண்ட இருவர் கைது!

ஒரு மணி நேரச் துரத்தல்! மின்கம்பி திருட்டுக் கும்பல் முறியடிப்பு! 60 குற்றப் பின்னணி கொண்ட இருவர் கைது!

சோகத்தில் முடிந்த காதல் பயணம்! கார் விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே பலி!

சோகத்தில் முடிந்த காதல் பயணம்! கார் விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே பலி!

சிலாங்கூர் முதல்வர் அலுவலகத்தில் ஊழல் வெடியா! "3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்களாவா?" - வாட்ஸ்அப் குழுவில் அதிர்ச்சி அம்பலம்!

சிலாங்கூர் முதல்வர் அலுவலகத்தில் ஊழல் வெடியா! "3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்களாவா?" - வாட்ஸ்அப் குழுவில் அதிர்ச்சி அம்பலம்!

கோலாலம்பூர் நிர்வாகத்தின் தோல்வி! "ஒரு மேயரும் இலக்கை எட்டவில்லை" - டிஏபியின் வெடிகுண்டு விமர்சனம்!

கோலாலம்பூர் நிர்வாகத்தின் தோல்வி! "ஒரு மேயரும் இலக்கை எட்டவில்லை" - டிஏபியின் வெடிகுண்டு விமர்சனம்!

எல்டிபி நெடுஞ்சாலையில் அதிரடி வேட்டை! 14 வாகனங்கள் பறிமுதல், 56 சம்மன்கள் வழங்கப்பட்டன!

எல்டிபி நெடுஞ்சாலையில் அதிரடி வேட்டை! 14 வாகனங்கள் பறிமுதல், 56 சம்மன்கள் வழங்கப்பட்டன!

நண்பனின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்! 2 மீட்டர் ஆழக் குட்டையில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி!

நண்பனின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்! 2 மீட்டர் ஆழக் குட்டையில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி!

இணைய ஆபத்துகள்: AI காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அவசிய... | Thisaigal News