கத்தாரில் மலேசிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்னார்வ வெளியேற்ற நடவடிக்கையில், 323 மலேசியர்கள் பங்கேற்று தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பல மலேசியர்கள் பதிவு செய்ய முன்வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று தயாராகும் என்று புத்ராஜெயா அறிவித்துள்ளது.
இந்த தன்னார்வ வெளியேற்ற நடவடிக்கையின் அடிப்படையில், முதல் விமானமானது வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ரியாத் சவூதி அரேபியா வழியாக மலேசியாவை வந்தடையவுள்ளதாக கத்தாருக்கான மலேசியத் தூதர் ஃபைசல் ரசாலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரியாத்தில் இருந்து கோலாலம்பூருக்கு சிறப்பு விமானங்களைப் பெற மலேசிய அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக சில விமான நிறுவனங்களையும் அனுகியுள்ளது.








