பினாங்கு, ஜார்ஜ் டவுன் மெக்கல்லம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, வெளிநாட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று அதிகாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் தலையில் பலத்த காயங்கள் இருந்ததைக் கண்டறிந்த போலீசார், அவர் ஒரு கடினமான பொருளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். உடற்கூறு ஆய்வின் முடிவில், தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்குத் தகுந்த காரணம் என்பது உறுதியானது.
இதையடுத்து, இந்தச் சம்பவத்தைக் கொலை வழக்காக வகைப்படுத்திய வடகிழக்கு மாவட்ட போலீசார், குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவரிடம் எந்தவொரு அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








