ஜார்ஜ் டவுன்,ஜூலை 12-
எலி விஷம் கலந்த தின்பண்டங்களை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் இருந்த இரண்டாவது சிறுவனும் இன்று பினாங்கு மருத்துவமனையின் (HPP) குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அச்சிறுவன் இன்று மரணமுற்றான்.
இரண்டு வயது முஹம்மது லூத் ஸ்யுக்கி, எனும் அச்சிறுவன் பிற்பகல் 1.24 மணிக்கு தனது இறுதி மூச்சை விட்டதாக அச்சிறுவனின் தாயார் தெரிவித்தார்.
தற்போது அச்சிறுவனின் உடல் கெடா, கம்போங் பாங்கோல் பெரங்கன், லாபு பெசாரில் உள்ள அவரது சகோதரரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மூத்தவரான 3 வயது முஹம்மது அகில் சௌகி நூர் சுஃபியன், கடந்த ஜூலை 10 அன்று பினாங்கு மருத்துவமனையில் காலை 8.30 மணியளவில் இறந்தார். தற்போது இரண்டாவது சிறுவனும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது








