கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிள்ளான், தாமான் செந்தோசாவில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் இரண்டு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றன.
31 வயது புவனேஸ்வரன் முனியாண்டி மற்றும் 38 வயது சுரேஷ் ஆரசாமி ஆகியோர் தற்போது தேடப்பட்டு வரவதாக கிள்ளான் செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்துள்ளார்.
கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெவ்வேறு இடங்களில் இதுவரையில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். 24 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் செய்யப்பட்டு இருப்பதாக ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டுள்ளார்.
தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு கடையில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவத்தில் இக்கும்பல் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை நிற பெருடுவா மைகவீ ரக காரில் சென்ற இக் கும்பல் வீடொன்றில் கொள்ளையடிக்க முற்பட்ட வேளையில் அங்கிருந்த வங்காளதேசத் தொழிலாளரை தக்கி காயம் விளைவித்தாக ஏசிபி சா ஹூங் ஃபாங்மேலும் கூறினார்.
பின்னர் ஆயிரம் வெள்ளி ரொக்கத்துடன் இக்கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து குற்றவியல் சட்டம் 394 பிரிவின் கீழ் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்


