இந்தோனேசிய மாதுவை பிணைப்பணம் கோரி கடத்திச் சென்றதாக ஒன்பது ஆடவர்கள், பினாங்கு, ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சி. யோகநாதன் உட்பட 29 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஜார்ஜ்டவுன், பாயா டெருபோங், பங்சாபுரி ஸ்ரீ அமன் என்ற இடத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 36 வயது இந்தோனேசிய மாதுவை கடத்திவைத்துக் கொண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை பிணைப்பணமாக கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒன்பது பேரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


