இந்தோனேசிய மாதுவை பிணைப்பணம் கோரி கடத்திச் சென்றதாக ஒன்பது ஆடவர்கள், பினாங்கு, ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சி. யோகநாதன் உட்பட 29 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஜார்ஜ்டவுன், பாயா டெருபோங், பங்சாபுரி ஸ்ரீ அமன் என்ற இடத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 36 வயது இந்தோனேசிய மாதுவை கடத்திவைத்துக் கொண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை பிணைப்பணமாக கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒன்பது பேரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


