இந்தோனேசிய மாதுவை பிணைப்பணம் கோரி கடத்திச் சென்றதாக ஒன்பது ஆடவர்கள், பினாங்கு, ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சி. யோகநாதன் உட்பட 29 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஜார்ஜ்டவுன், பாயா டெருபோங், பங்சாபுரி ஸ்ரீ அமன் என்ற இடத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 36 வயது இந்தோனேசிய மாதுவை கடத்திவைத்துக் கொண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை பிணைப்பணமாக கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒன்பது பேரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


