மலேசியாவின் அடையாளமாக திகழும் ஒற்றைக் கோபுரத்தின் நிர்வாகத்தை மிக விரைவாக கைப்பற்றுவதற்காகவும் அதன் செயல்முறைகளை விரிவுப்படுத்துவதற்காகவும் முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சரான டான் ஶ்ரீ அனுவார் மூசாவிற்க்கு வருடத்திற்கு 5 லட்சம் வெள்ளி என 15 வருடத்திற்கு லஞ்சம் தருவதாக கூறிய குற்றத்திற்காக
ஹைட்ரோஷாப் எஸ்.டி.ன். பி.எச்.டி நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ அப்துல் ஹமிட் ஷேக் அப்துல் ரசாக் மீது இன்று நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
49 வயதான அந்த இயக்குனர் தனது தவற்றை நீதிபதியின் முன் ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்ற விசாரணைக் கோரி மனு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் அன்று ஊழல் தடுப்பு வாரியம் நடத்திய விசாரணையில் ஒற்றைக் கோபுரத்தின் பங்குகள் வாங்கப்பட்டிருப்பதஹகவும் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கான விரைவு நடவடிக்கைகாக லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


