Jan 12, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் தனியார் பல்கலைக்கழகத்தில் வெடிப்பு: 4 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் தனியார் பல்கலைக்கழகத்தில் வெடிப்பு: 4 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மதியம் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த கம்ப்ரஸர் (Compressor)ஒன்று திடீரென வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த ஒன்பது பேரில் நான்கு பேர் மாணவர்கள் ஆவர். மற்றவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த விபத்து குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டத்தோ ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.

Related News

சுற்றுலாத் துறை பாதுகாப்பு: 10,000 பணியாளர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'சிட்டி' (SITI) திட்டம் - அமைச்சர் ஆர். ரமணன்

சுற்றுலாத் துறை பாதுகாப்பு: 10,000 பணியாளர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'சிட்டி' (SITI) திட்டம் - அமைச்சர் ஆர். ரமணன்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் குறித்து இந்த ஆண்டில் ஆய்வு

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் குறித்து இந்த ஆண்டில் ஆய்வு

தாப்பாவில் சோகம்: சாலை விபத்தில் 80 வயது மூதாட்டி பலி

தாப்பாவில் சோகம்: சாலை விபத்தில் 80 வயது மூதாட்டி பலி

முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தும் ஸாஹிட் வழக்கு கைவிடப்பட்டது ஏன்? காரணங்களை உடைத்தார் சட்டத்துறை தலைவர்

முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தும் ஸாஹிட் வழக்கு கைவிடப்பட்டது ஏன்? காரணங்களை உடைத்தார் சட்டத்துறை தலைவர்

2 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மனிதாபிமான நிதி மோசடி: என்ஜிஓ தலைவர் மீது குற்றச்சாட்டு

2 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மனிதாபிமான நிதி மோசடி: என்ஜிஓ தலைவர் மீது குற்றச்சாட்டு

இவ்வாண்டு பள்ளிகளில் பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்படும் - கல்வி அமைச்சு தகவல்

இவ்வாண்டு பள்ளிகளில் பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்படும் - கல்வி அமைச்சு தகவல்