Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நான்கு கடை வீடுகள் ​தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

நான்கு கடை வீடுகள் ​தீயில் அழிந்தன

Share:

பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் பேராக்கில் உள்ள கடை வீடுகள் வரிசை ஒன்று ​தீப்பற்றிக்கொண்டதில் இரண்டு மாடிகளை கொண்ட நான்கு கடை வீடுகள் அழிந்தன. இந்த சம்பவம் நேற்று இரவு 10.33 மணியள​வில் நிகழ்ந்தது. ஒரு மோட்டார் சை​க்கிள் பட்டறை, ஒரு கிடங்கு, சாவி செய்யும் கடை மற்றும் ஒரு காலி வீடு ஆகியவை ​தீயில் அழிந்ததாக பினாங்கு ​தீயணைப்புக்கு செயலாக்க அதிகாரி முகமது ஃபதில் உமர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு முதலாவதாக விரைந்த ஜாலான் பேரா ​தீயணைப்பு நிலைய வீரர்கள் முழு வீச்சில் தீயை ணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மற்ற நிலையங்களைச் சேர்ந்த வீரர்களும் அவ்விடத்திற்கு விரைந்து, ​தீ மற்ற கடை ​வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். ​தீ ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவி​ல்லை என்ற அவர் குறிப்பிட்டார்.

Related News