லெபனான் நாட்டைச் சேர்ந்த மொத்த நகை வியாபாரி தமக்கு அனுப்பிய கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள 43 நகைகள் காணாமல் போனதற்குத் தாம் பொறுப்பேற்க முடியாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
போலீசார் அல்லது மலேசிய அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட் நகைகளில் காணாமல் போனதாகக் கூறப்படும் 43 நகைகளின் ஒன்று அவர்களிடம் இருப்பதன் அடிப்படையில், அந்த நகைகள் போலீசார் இருக்கின்றன என்பது நம்பகத்தன்மைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று ரோஸ்மா தமது சத்தியப்பிரமாண வாக்குமூலம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த நகைகள் காணாமல் போனதற்கு தாம் காரணமல்ல. அந்த நகைகள் அனைத்தையும் தாம் ஒரே இடத்தில் வைத்திருந்தாகவும், அவற்றை போலீசார் பறிமுதல் செய்து உடன் கொண்டுச் சென்றனர் என்றும் ரோஸ்மா குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள அந்த நகைகளை தாம் வைத்திருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று ரோஸ்மா தமது ம னுவில் தெரிவித்துள்ளார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


