லெபனான் நாட்டைச் சேர்ந்த மொத்த நகை வியாபாரி தமக்கு அனுப்பிய கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள 43 நகைகள் காணாமல் போனதற்குத் தாம் பொறுப்பேற்க முடியாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
போலீசார் அல்லது மலேசிய அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட் நகைகளில் காணாமல் போனதாகக் கூறப்படும் 43 நகைகளின் ஒன்று அவர்களிடம் இருப்பதன் அடிப்படையில், அந்த நகைகள் போலீசார் இருக்கின்றன என்பது நம்பகத்தன்மைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று ரோஸ்மா தமது சத்தியப்பிரமாண வாக்குமூலம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த நகைகள் காணாமல் போனதற்கு தாம் காரணமல்ல. அந்த நகைகள் அனைத்தையும் தாம் ஒரே இடத்தில் வைத்திருந்தாகவும், அவற்றை போலீசார் பறிமுதல் செய்து உடன் கொண்டுச் சென்றனர் என்றும் ரோஸ்மா குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள அந்த நகைகளை தாம் வைத்திருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று ரோஸ்மா தமது ம னுவில் தெரிவித்துள்ளார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


