Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுக்காணப்படும்!
தற்போதைய செய்திகள்

அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுக்காணப்படும்!

Share:

புத்ராஜெயா, மே 17-

மருத்துவர் பற்றாக்குறை நிலவும் மாவட்ட மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி, சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மது ரட்ஸி அபு ஹாசன்-னுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ட்ஸுல்கெப்பிலி அஹ்மத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் பற்றாக்குறையைக் களைய, தமது அமைச்சு நடுத்தர கால அடிப்படையிலும் நீண்டக்கால அடிப்படையிலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

நாட்டில் 147 பொது மருத்துவமனைகளும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார கிளினிக்குகளும் உள்ளன.

ஆட்பல பற்றாக்குறை காரணமாக, அவற்றில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் அவர்களது பணிச்சுமை குறித்த புகார்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

அது தவறில்லை என்றாலும், கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் தவிர்க்க வேண்டுமென ட்ஸுல்கெப்பிலி அஹ்மத் வலியுறுத்தினார்.

கெடாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில், நோயாளிகளை அதிக நேரம் காக்க வைத்திருந்ததற்காக, மருத்துவர் ஒருவர் மன்னிப்புக் கோரி பதாகை ஒன்றை வைத்திருந்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலானது குறித்து ட்ஸுல்கெப்பிலி அஹ்மத் அவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து