நாடு முழுவதும் உள்ள பி.பி.ஆர் அடுக்குமாடி பொது குடியிருப்பு ப்பகுதிகளில் உடல் உபாதைகளுக்கான மருந்துப் பொருட்களை சுயசேவை கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மக்கள் பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக ஊராட்சிமன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இரவு வேளைகளில் ஆபத்து அவசர தருணங்களில் இந்த கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மருந்துப் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஊராட்சிமன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து மருந்துப் பொருட்களுக்கான முகப்பிடங்களை உருவாக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.
நள்ளிரவு வேளைகளில் பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் மக்கள் மருந்தகங்களுக்கு சென்று மருந்துப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாறாக, பி.பி.ஆர் குடியிருப்புப்பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சுயசேவை கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


