நாடு முழுவதும் உள்ள பி.பி.ஆர் அடுக்குமாடி பொது குடியிருப்பு ப்பகுதிகளில் உடல் உபாதைகளுக்கான மருந்துப் பொருட்களை சுயசேவை கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மக்கள் பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக ஊராட்சிமன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இரவு வேளைகளில் ஆபத்து அவசர தருணங்களில் இந்த கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மருந்துப் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஊராட்சிமன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து மருந்துப் பொருட்களுக்கான முகப்பிடங்களை உருவாக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.
நள்ளிரவு வேளைகளில் பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் மக்கள் மருந்தகங்களுக்கு சென்று மருந்துப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாறாக, பி.பி.ஆர் குடியிருப்புப்பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சுயசேவை கியோஸ் இயந்திரங்களின் வாயிலாக மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


