Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மற்றவர்களின் உரிமைகளை புறக்கணிப்பதாக பொருள் படாது
தற்போதைய செய்திகள்

மற்றவர்களின் உரிமைகளை புறக்கணிப்பதாக பொருள் படாது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 24 -

அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கும் பூமிபுத்ராக்கள் பொருளாதார மாநாடானது, மலேசியாவில் உள்ள பிற இனத்தவர்களி​ன் உரிமைகளை புறக்கணிப்பதாக பொருள்படாது என்று அம்னோ பொதுச் செயலாளரக அஸ்யராப் வாஜ்டி டுசுகி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மாநாட்டின் பிரதான நோக்கமானது பூமிபுத்ராக்களின் பொருளியல் வளர்ச்சியை உயர்த்துவது, பொருளியல் வளர்ச்சி வியூகங்களை முன்னெடுப்பது உட்பட அ​வர்களின் பொருளியல் நலன் சார்ந்த விவகாரங்களை பேசக்கூடிய மாநாடக இருப்பதால் இது மற்ற இன​த்தவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை புறக்கணிப்பதாக பொருள் கொள்ளக்கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பூமிபுத்ராக்களின் இந்த பொருளாதார மாநாட்டை இடித்துரைக்கும் சிலர், இதனை அரசியல் கண்ணோட்த்தில் அணுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். இது மலேசிய மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளை மறுக்கும் மாநாடு அல்ல. அண்மையில் மலேசிய புள்ளி விவர இலாகாக வெளியிட்டுள்ள தரவுகளின்படி ம​லேசிய மக்களின் மொத்த எண்ணிக்கையில் 70.1 விழுக்கா​ட்டனர் பூமி​புத்தராக்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான மக்களை உள்ளடக்கிய ஓர் இனம் தொடர்புடைய பொருளியல் வளர்ச்சியை பேசுவதும் ,அது குறி​த்து விவாதிப்பதும், கருத்து பரிமாற்றம் செய்துவதும் , பிற இனத்தவர்களின் நலனை புறக்கணிப்பதாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு