Mar 24, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப வன்முறைக்கு ஆண்களும் ஆளாகிறார்கள்
தற்போதைய செய்திகள்

குடும்ப வன்முறைக்கு ஆண்களும் ஆளாகிறார்கள்

Share:

கோலாலம்பூர், ஜூலை 4-

குடும்ப வன்முறைக்கு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று குடும்ப, மகளிர், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் சமூக மேம்பாட்டு இலாகாவின் ஆய்வின்படி 2 ஆயிரத்து 794 குடும்ப வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த குடும்ப வன்முறை சம்பவங்களில் எவ்வளவு ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அமைச்சர் நான்சி சுக்ரி, துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை.

பதிவாகியுள்ள 2 ஆயிரத்து 794 குடும்ப வன்முறை சம்பவங்களில் பெண்களும், ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News