பெர்சத்து கட்சி தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் நீடிப்பதோடு, அதன் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் முகமது யாசின் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி, பெர்சத்து உடனான அரசியல் உறவை உடனடியாக முறித்துக் கொள்வதாக எடுத்த அதிரடி முடிவிற்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளமுஹிடின், இந்த உறவு முறிவின் , பாஸ் கட்சியின் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டது என்று விளக்கியுள்ளார்.
பாஸ் கட்சியுடன் இனி ஒத்துழைப்பு இல்லை என்ற போதிலும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி முன்வைக்கும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும், கட்சியின் அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








