Mar 16, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஏ நெடுஞ்சாலையில் கார் விபத்து: 22 வயது இளைஞன் பலி!
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஏ நெடுஞ்சாலையில் கார் விபத்து: 22 வயது இளைஞன் பலி!

Share:

அலோர் காஜா, டிசம்பர்.07-

இன்று அதிகாலை 3 மணியளவில் SPA எனப்படும் Sungai Udang - Paya Rumput - Alor Gajah நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், 22 வயதான இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சத்ரியா கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்துக்குள்ளான கார் சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களுக்குள் புகுந்து விட்டதாக அலோர் காஜா மாவட்ட காவற்படைத் தலைவர், சுப்ரிண்டெண்டன் அஹ்மாட் அபு பக்கார் தெரிவித்தார்.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அந்த இளைஞன், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டான். உடல் உடற்கூறு ஆய்வுக்காக அலோர் காஜா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் விசாரணைக்கு உதவ விபத்தைக் கண்டவர்கள் முன்வருமாறு காவற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்