Jun 29, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஏ நெடுஞ்சாலையில் கார் விபத்து: 22 வயது இளைஞன் பலி!
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஏ நெடுஞ்சாலையில் கார் விபத்து: 22 வயது இளைஞன் பலி!

Share:

அலோர் காஜா, டிசம்பர்.07-

இன்று அதிகாலை 3 மணியளவில் SPA எனப்படும் Sungai Udang - Paya Rumput - Alor Gajah நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், 22 வயதான இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சத்ரியா கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்துக்குள்ளான கார் சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களுக்குள் புகுந்து விட்டதாக அலோர் காஜா மாவட்ட காவற்படைத் தலைவர், சுப்ரிண்டெண்டன் அஹ்மாட் அபு பக்கார் தெரிவித்தார்.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அந்த இளைஞன், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டான். உடல் உடற்கூறு ஆய்வுக்காக அலோர் காஜா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் விசாரணைக்கு உதவ விபத்தைக் கண்டவர்கள் முன்வருமாறு காவற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு