ஜோகூர் பாரு, மே.24-
ஜோகூர் மாநில அரசு, தனது 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், நான்காவது ஆண்டாக 'ஆசிரியர்கள் அறை உதவித்’ திட்டத்திற்காக 5.975 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1,195 பள்ளிகளில் பணியாற்றும் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தின் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றும் ஆசிரியர்களின் சேவைக்கும் தியாகத்திற்கும் மதிப்பளிக்கும் விதமாக இந்த உதவி வழங்கப்படுகிறது. வகுப்பறையில் கற்பிப்பது மட்டுமின்றி, மாணவர்களின் நம்பிக்கையை வளர்த்து, நற்பண்புகளை உருவாக்கி, அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








