நீதிபதிகளை விசாரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் அதிகாரத்தைப் பறிப்பது உட்பட நீதித் துறையில் தலையிடுவதற்கு முனைப்புக் காட்டிவரும் நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கரேன் சியே கேட்டுக்கொண்டுள்ளார்.
SRC International வழக்கில், நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் லஞ்ச ஊழல் விசாரணையை மேற்கோள் காட்டிய கரேன் சியே, நீதிபதிகளின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை இல்லை என்றார்.
நீதிபதிகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று மலேசிய வழக்கறிஞர் மன்ற சார்பில் கரேன் சியே கேட்டுக்கொண்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


