நீதிபதிகளை விசாரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் அதிகாரத்தைப் பறிப்பது உட்பட நீதித் துறையில் தலையிடுவதற்கு முனைப்புக் காட்டிவரும் நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கரேன் சியே கேட்டுக்கொண்டுள்ளார்.
SRC International வழக்கில், நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் லஞ்ச ஊழல் விசாரணையை மேற்கோள் காட்டிய கரேன் சியே, நீதிபதிகளின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை இல்லை என்றார்.
நீதிபதிகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று மலேசிய வழக்கறிஞர் மன்ற சார்பில் கரேன் சியே கேட்டுக்கொண்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


