Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மிக அசுத்தமான 5 உணவகங்கள் மூடப்பட்டன

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.20-

பினாங்கு மாநகர் மன்றம், ஆயிர் ஹித்தாம்- பண்டார் பாரு ஃபார்லீமில் உள்ள ஐந்து உணவகங்களை மூடும்படி இன்று உத்தரவிட்டுள்ளது. அசுத்தத்தின் உறைவிடமாகக் காணப்பட்ட அந்த ஐந்து உணவகங்களும் இன்று தொடங்கி, 14 நாட்களுக்கு மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாநகர் மன்றத்தின் சுகாதார அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் உணவகங்களில் மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் இறங்கினர். அந்த உணவகங்களில் சமையல் பானைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எலிகளின் எச்சம் திட்டுதிட்டாக குவிந்து இருந்ததுடன் பாசைப்பூச்சிகள் நிறைந்து இருந்ததாக மாநகர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

Related News