Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அரசு மருத்துவமனையின் கவனக்குறைவு: விமல்ராஜ்க்கு 7.4 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையின் கவனக்குறைவு: விமல்ராஜ்க்கு 7.4 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.03-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பல அறுவை சிகிச்சைகளின் விளைவாக அம்பாங் அரசு மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களின் கவனக்குறைவினால் உடல் உறுப்புகளை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளான ஆடவர் ஒருவருக்கு 7.4 மில்லின் ரிங்கிட் இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

22 வயது கே. விமல்ராஜ் என்பவருக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சு தியாங் ஜூ உத்தரவிட்டார்.

7.4 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையில், 6.4 மில்லியன் ரிங்கிட்டில் கே. விமல் ராஜ் ஒரு ரோபோ கை மற்றும் இரண்டு ரோபோ கால்களை வாங்குவதற்கு வழங்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

உடல் உறுப்புகளை இழந்ததால் ஏற்பட்ட வலி மற்றும் துன்பத்திற்கு மொத்தம் இரண்டு லட்சத்து 13 ஆயிரம் ரிங்கிட்டும், வீட்டுப் பராமரிப்புக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டும், கடும் பாதிப்புக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

எனினும் விமலின் தந்தை ஜே. கிருஷ்ணசாமியின் வருமான இழப்புக்கான இழப்பீட்டுக் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனது மகனால் தமக்கு வருமான பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிரூபிக்க கிருஷ்ணசாமி, எந்த ஆவண ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதி சு தியாங் ஜூ தனது தீர்ப்பில் கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை