Jan 23, 2026
Thisaigal NewsYouTube
உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்
தற்போதைய செய்திகள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

Share:

ஷா ஆலாம், ஜனவரி.23-

கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி, திரெங்கானு, ஜெர்தேவிலிருந்து பேராக், தஞ்சோங் மாலிமிற்கு சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகமான உப்சியைச் சேர்ந்த 42 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் பலியான சம்பவத்திற்கான முக்கிய காரணங்கள் தற்போது வெளி வந்துள்ளன.

போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணைச் சிறப்புக் குழு வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில், இந்தப் பேருந்து சட்டவிரோதமாக இயக்கப்பட்டது என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் விபத்திற்கான 4 முக்கிய காரணங்களையும் அது விளக்கியுள்ளது. உரிய அனுமதியின்றி பேருந்து மற்றொரு தரப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

பேருந்து உரிமமான பெர்மிட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. சுற்றுலா மற்றும் கலை, கலாச்சார அமைச்சின் கீழ் வழங்கப்படும் சில விலக்கு நடைமுறைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தரைப் போக்குவரத்து பொது ஆணையமான ஸ்பாட் நிர்ணயித்து இருந்தப் பாதுகாப்புத் தொழில்முறை விதிகள் பிற்பற்றப்படவில்லை.

இதற்கு மேலாக சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு ஏற்கனவே அதிவேகப் பயணம் உட்பட பல டஜன் போக்குவரத்துச் சம்மன்கள் இருந்தும், அதனைச் சரிபார்க்காமல் அந்தப் பேருந்து நிறுவனம் அவரைப் பணியில் அமர்த்தியுள்ளது.

தகுதியற்ற, ஒழுக்கமற்ற மற்றும் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஓட்டுநர்களைப் பொதுப் போக்குவரத்து வாகனங்களை ஓட்ட அனுமதிப்பது, ஒரு முறையற்ற நிர்வாகச் செயல்பாட்டைக் காட்டுகிறது என அந்த சிறப்புக்குழு தனது அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முதலீட்டு மோசடி: ‘டான்ஸ் ஶ்ரீ’ பட்டம் பெற்ற பிரமுகருக்கு 4 நாள் தடுப்புக் காவல் - 300 மில்லியன் ரிங்கிட் வரை முறைகேடு

முதலீட்டு மோசடி: ‘டான்ஸ் ஶ்ரீ’ பட்டம் பெற்ற பிரமுகருக்கு 4 நாள் தடுப்புக் காவல் - 300 மில்லியன் ரிங்கிட் வரை முறைகேடு