Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காரை எட்டி உதைத்து பகடி செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் - விசாரணைக்காக 9 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

காரை எட்டி உதைத்து பகடி செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் - விசாரணைக்காக 9 பேர் கைது!

Share:

செர்டாங், செப்டம்பர்.30-

கோலாலம்பூரில் கார் ஒன்றைச் சுற்றி வளைத்துப் பகடி செய்த சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 முதல் 21 வயதுடைய அவர்கள் பூச்சோங் மற்றும் ஷா ஆலம் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக செர்டாங் ஒசிபிடி துணை ஆணையர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த காரைச் சுற்றி வளைத்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் இக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் அக்காரை காலால் எட்டி உதைப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அவர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்