Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மாசிமகம் உபயத்தாரின் மாசிமகம் திருவிழா
தற்போதைய செய்திகள்

மாசிமகம் உபயத்தாரின் மாசிமகம் திருவிழா

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 22 -

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் மாசிமகம் உபயத்தாரின் மாசிமகத் திருவிழாவும், இரத ஊர்வலமும், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பிப்ரவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பத்துமலைத்திருத்தல சுவாமி மண்டபத்தில் ஸ்ரீ கணேசப் பெருமான் மற்றும் ஸ்ரீ வரதராஜுப் பெருமான் எழுந்தருளி மாலை 6.00 மணிக்கு சிறப்புப் பூஜைகளுடன் மங்கள வாத்தியங்களுடன் பத்துமலைத் திருத்தலத்திலிருந்து இரதம் புறப்பட்டு பல்வேறு சாலைகளை கடந்த செந்தூல் பசார் சென்று, அதன் பின்னர் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலை வந்தடையும் என்று தேவஸ்தானத் தலைவரும் மாசிமகம் உபய நாட்டாண்மையும், அறங்காவலருமான டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.

பத்துமலையிலிருந்து இரத ஊர்வல புறப்பாடு, ஜாலான் ம்.ம்.ர் 2, ஜாலான் ஶ்ரீ பத்து கேவ்ஸ்,ஜாலான் 46/10,ஜாலான் செந்துல்,ஜாலான் ஈப்போ,ஜாலான் துவான்கு அப்துல் ரஹ்மான் ,ஜாலான் ராஜ,லேபு பாசார்,ஜாலான் பெட்டாலிங்,ஜாலான் துன் ஹ.ஸ். லீ ஆகிய 13 சாலைகளின் வாயிலாக அடியார்களுக்கு அருள்பாலித்து, நள்ளிரவு 12.00 மணிக்கு தாய்க்கோயிலான ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலை வந்தடையும் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

பக்தப் பெருமக்கள் அனைவரும் தவறாது வருகை தந்து இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி உபய நாட்டாண்மையான டான்ஸ்ரீ நடராஜா, உபயப்பிரதிநிதிகளான டத்தோ கு. செல்வராஜு, டத்தோ T. ராஜ்குமார் ஆகியோர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு