May 23, 2026
Thisaigal NewsYouTube
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அரசாங்கம் ஊக்குவிக்கும்
தற்போதைய செய்திகள்

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அரசாங்கம் ஊக்குவிக்கும்

Share:

ரெம்பாவ் , ஜூலை 15-

நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பில் பல்வேறு கொள்கைகளை அரசாங்கம் பயன்படுத்தவிருக்கிறது. இதனை தனியார் உட்பட பல்வேறு துறையினரின் ஆதரவுடன் அரசாங்கம் அமல்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இயந்திர வாகனங்களின் வாயிலாக கரியமிள வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பூஜிய மாசுப்பாடு இலக்கை நிறைவேற்றுவதற்கு மின்சார வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News