May 6, 2026
Thisaigal NewsYouTube
6 மலேசியர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

6 மலேசியர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.27-

தென் தாய்லாந்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி Hat Yai நகரில் அவதியுற்று வந்த ஆகக்கடைசி நபர்களான 6 மலேசியர்களும் இன்று வியாழக்கிழமை வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பரிதவித்து வந்த அந்த ஆறு மலேசியர்களும், ஹோட்டலிலிருந்து வெளியேறி, Central Hat Yai- க்குச் செல்ல வெள்ளத்தின் மத்தியில் முழங்கால் வரை உயர்ந்திருந்த நீரின் மட்டத்தில் நடந்தே சென்றதாகப் பாதிக்கப்பட்ட மலேசியர்களில் ஒருவரான 38 வயது நூருல் சஃபினார் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

அந்த மாது, தனது கணவர் மற்றும் 9, 5 வயதில் உள்ள இரு பிள்ளைகளுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார். கனத்த மழை, இன்னும் நில நாட்கள் வரை நீடிக்கும் என்று ஆருடம் கூறப்பட்டதால் தாங்கள் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்