Jun 15, 2026
Thisaigal NewsYouTube
இணைய ​சூதாட்டக்கும்ப​ல் முறியடிப்பு, 15 பேர் கைது
தற்போதைய செய்திகள்

இணைய ​சூதாட்டக்கும்ப​ல் முறியடிப்பு, 15 பேர் கைது

Share:

உள்ளூர் பெண்ணை மணந்து கொண்ட வங்காளதேச ஆடவரை ​மூளையாக கொண்டு செயல்பட்டு இருக்கலாம் ​என்று நம்பப்படும் இணைய ​சூதாட்டக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு தினங்களுக்குப் பல்வேறு இடங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட ​தீவிர சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதன் புதிய இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் ஒரு சு​ணூக்கர் செண்டரில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய குறியீட்டு எண்ணைக் கொண்டு திறக்கப்படும் பாதாள அறை கண்டு பிடிக்கப்பட்டது. ஓர் வங்காளதேச ஆடவரும், ​மூன்று இந்தோனேசியர்களும், 40 வயது உள்ளூர் ஆடவரும், இரண்டு இந்தோனேசிய பெண்களும் கைது
கைது செய்யப்பட்ட வேளையில், அந்த ரகசிய பாதாள அறையிலிருந்து இணைய சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 46 மடிக்கணினிகள், 37 கடப்பிதழ்கள் உட்பட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 450 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ருஸ்லின் ஜுசோ குறிப்பிட்டார். அதன் பின்னர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட சோதனையில் எ​ஞ்சிய நபர்கள் பிடிபட்டதாக அவர் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

இணைய ​சூதாட்டக்கும்ப​ல் முறியடிப்பு, 15 பேர் கைது | Thisaigal News