May 21, 2026
Thisaigal NewsYouTube
வியாபாரி ஒன்லைன் மோசடியில் 1 மில்லியன் இழப்பு
தற்போதைய செய்திகள்

வியாபாரி ஒன்லைன் மோசடியில் 1 மில்லியன் இழப்பு

Share:

அலோர் காஜா,ஜன.11
கடை உரிமையாளர் ஒருவர் ஒன்லைன் மோசடியில் 1 மில்லியன் வெள்ளியை இழந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் தம்மை பேராக் போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்ட சந்தேகிக்கும் நபரான Sergeant Tan - யிடம் இருந்து கடை உரிமையாளர் அழைப்பு பெற்றதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.

போலீசாரிடம் பிடிப்படுவதை தவிர்ப்பதற்கு வழங்கப்படுகின்ற அனைத்து கூறுகளையும் பின்பற்றுமாறு சந்தேகிக்கும் நபர் பாதிக்கப்பட்டவருக்கு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சிம்பாங் அம்பாங் - கில் உள்ள ஓர் இடத்தில் கடை உரிமையாளரின் ATM வங்கி அட்டை, வங்கி கணக்கு எண்ணை வைத்து விட்டு செல்லுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது என்று விசாரணையில் நேற்று தெரியவந்துள்ளது.

பின் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்ததாக அர்ஷாட் அபு விவரித்தார்.

Related News