Jan 23, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளும்படி மனைவியை மிரட்டிய கணவன்
தற்போதைய செய்திகள்

போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளும்படி மனைவியை மிரட்டிய கணவன்

Share:

தம்மை அடித்து துன்புறுத்தியதுடன் வீட்டைக் கொளுத்தப் போவதாக மிரட்டிய கணவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்த ஓர் இந்திய மாது, ஈப்போ நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் கடும் எச்சரிக்கைக்கு ஆளானார்.

கணவரை மிரட்டுவதற்கு போலீஸ் புகாரை ஒரு விளையாட்டுப் பொருளாக பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மாதுவிற்கு மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் நினைவுறுத்தினார்.

தமது கணவர் ஜி. கணேசன் தம்மை அடித்து துன்புறுத்தியதாக 36 வயது எஸ்.பிரேமலதா, செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து கணேசனுக்கு எதிரான வழக்கு இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்தது.

எனினும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமது கணவருக்கு எதிரான புகாரை மீட்டுக்கொள்ளப் போவதாக கிந்தா, மாவட்டம், செமோர் ரை சேர்ந்த பிரேம் லதா நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

போலீஸ் புகார் விளையாட்டு அல்ல. நினைத்த மாத்திரம் புகார் அளிப்பதற்கும், அதனை மீட்டுக்கொள்தற்கும் விளையாட்டுப்பொருள் அல்ல. உங்கள் விளையாட்டை காட்டுவதற்கு போலீஸ் நிலையத்தை ஒரு தளமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த பெண்மணிக்கு மாஜிஸ்திரேட் நினைவுறுத்தினார்.

38 வயது கணேசன் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் செம்மோரில் உள்ள தமது வீட்டில் மனைவியை அடித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
தனக்கு எதிராக குற்றத்தை கணேசன் மறுத்து விசாரணை கோரியுள்ள வேளையில் பிரேமலதா, அந்த போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளப் போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பிரேமலதாவை மாஜிஸ்திரேட் கண்டித்தார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது