Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கீன நடவடிக்கை: 29 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஒழுங்கீன நடவடிக்கை: 29 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.25-

ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 29 அந்நிய நாட்டுப் பிரஜைகளை ஜோகூர் குடிநுழைவுத்துறையினர் கைது செய்தனர்.

நேற்று ஜோகூர் பாரு மாநகரில் வர்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இவர்கள் பிடிபட்டனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலின் அடிப்படையில் காலை 11 மணி முதல் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

வாடிக்கையாளர் ஒருவருக்கு 260 ரிங்கிட் சேவைக் கட்டணமாக விதித்து பாலியல் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

22 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய 29 பேரும் 1963 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு