கிளந்தான், கோத்தா பாரு நீதிமன்ற வளாகத்தின் தடுப்புக்காவல் அறையில் 19.8 கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக 38 வயதான போலீஸ் அதிகாரி ஒருவர் மீது இன்று கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் ரயிஸ் இம்ரான் ஹமித், ராய்ஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட பாடிலுல் மூசா என்ற அந்த போலீஸ் அதிகாரி, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்க வகை செய்யும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








