Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியப் பிரஜை பன்னீர் செல்வத்திற்கு அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு
தற்போதைய செய்திகள்

மலேசியப் பிரஜை பன்னீர் செல்வத்திற்கு அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதற்காகத் தூக்குத் தண்டனை விதிக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு வரும் அக்டோபர் 8 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தனக்கு எதிரான தண்டனையை ரத்து செய்யக் கோரி, பன்னீர் செல்வம் செய்து கொண்ட ஆகக்கடைசி மேல்முறையீட்டு மனுவைச் சிங்கப்பூர் அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8 ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் வைகறை நேரத்தில் பன்னீர் செல்வத்திற்குத் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு தேதி, நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான 38 வயது பன்னீர் செல்வத்திற்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து அவரின் குடும்பத்திற்கு சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலை இன்று சனிக்கிழமை காலையில் தெரியப்படுத்தியிருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கடந்த ஒன்பது நாட்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்படும் இரண்டாவது நபராக பன்னீர் செல்வம் விளங்குகிறார். கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை, ஜோகூர், உலு திராமைச் சேர்ந்த 39 வயது கே. தட்சணாமூர்த்திக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்குக் காத்திருக்கும் பன்னீர் செல்வம், கடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 51.84 கிராம் போதைப்பொருளைக் கடத்தியதற்காக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

எழுத்தாளரும், கவிஞருமான பன்னீர் செல்வம், தனது மரணத் தண்டனை நிறைவேற்றத் தேதியைத் தெரியாமலேயே கடந்த வாரம், 'Death Row Literature' எனும் மரண வரிசை இலக்கியம் எனும் ஒரு நூலை சிறைச்சாலையில் வெளியிட்டார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு